9 30
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

Share

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்(donald trump) அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி (narendra modi)அமெரிக்கா சென்ற நிலையிலும் அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை. இந்தியர்களை ஏற்றிய அமெரிக்காவின் இரண்டாவது விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது. அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்த இடியாக அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதியையே இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டொலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், மோல்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டொலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டொலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று நிதி நிறுத்தப்பட்டுள்ள நாடுகளின் விபரம் வருமாறு

வங்கதேசத்தில், அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு 29 மில்லியன் அமெரிக்க டொலர். நேபாளத்துக்கான பல்லுயிர் பாதுப்புக்கான 10 மில்லியன் டொலர். லைபீரியாவுக்கான 1.5 மில்லியன் டொலர். மாலி நாட்டுக்கான 14 மில்லியன் டொலர் தெற்கு ஆபிரிக்காவுக்கான 2.5 மில்லியன் டொலர் ஆசியாவுக்கு கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு 47 மில்லியன் டொலர் நிதி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...