இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

Share
9 30
Share

இந்தியாவுக்கான நிதியுதவி : அதிரடியாக நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்(donald trump) அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி (narendra modi)அமெரிக்கா சென்ற நிலையிலும் அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயற்பாடு நிறுத்தப்படவில்லை. இந்தியர்களை ஏற்றிய அமெரிக்காவின் இரண்டாவது விமானம் பஞ்சாபில் தரையிறங்கியது. அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்த இடியாக அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவியும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டொலர் நிதியையே இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டொலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், மோல்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டொலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டொலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று நிதி நிறுத்தப்பட்டுள்ள நாடுகளின் விபரம் வருமாறு

வங்கதேசத்தில், அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு 29 மில்லியன் அமெரிக்க டொலர். நேபாளத்துக்கான பல்லுயிர் பாதுப்புக்கான 10 மில்லியன் டொலர். லைபீரியாவுக்கான 1.5 மில்லியன் டொலர். மாலி நாட்டுக்கான 14 மில்லியன் டொலர் தெற்கு ஆபிரிக்காவுக்கான 2.5 மில்லியன் டொலர் ஆசியாவுக்கு கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு 47 மில்லியன் டொலர் நிதி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Share
Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...