38
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்ற நிலையில், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில், விசா காலாவதி ஆன பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், மாணவர் விசா மற்றும் H-1B விசாக்கள் காலாவதியானாலும் நாட்டில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து குடியேற்ற ஆய்வுகள் மையத்தின் நிபுணரான ஜெசிகா எம்.வாகன் கருத்து தெரிவிக்கையில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 இந்திய மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனிநபர்கள் தங்கள் மாணவர் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வியை முடித்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...