10 57
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 22 மில்லியன் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு

Share

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 22 மில்லியன் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு(Donald Trump) பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய வழக்கில், 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

அத்துடன் தனது பேச்சை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.

அதனை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்க இருந்த தலைமை செயலக கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட ட்ரம்ப்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்க கணக்குகள் முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தன் மீது அவதூறு சுமத்தி, தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டதாக ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கணக்கை முடக்கியதால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்புக்கு 22 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்க மெட்டா முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் தரப்பு வழக்கறிஞ்சர், கலிபோர்னியா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால், இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...