23 8
இந்தியாஉலகம்செய்திகள்

விசா, பணி அனுமதி பெறுவதை எளிமையாக்கும் பிரான்ஸ்: இந்தியர்களை ஈர்க்க திட்டம்

Share

இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய இயக்குநரான Luis Vassy, சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, தங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது, ஆகவே தங்கள் நாட்டுக்கு வரலாம் என சர்வதேச மாணவர்களை வரவேற்றது நினைவிருக்கலாம்.

இந்திய மாணவர்களை பிரான்சுக்கு கல்வி கற்க வரவேற்ற Vassy, தங்கள் பல்கலையில் பயிலும் மாணவர்களில் பாதிபேர் வெளிநாட்டவர்கள்தான் என்றும், பல்கலையில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

கனடா அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் அந்த பிரச்சினை எல்லாம் கிடையாது. அதனால், சர்வதேச மாணவர்கள் வந்து எங்கள் நாட்டில் கல்வி கற்கலாம் என்றும் கூறியிருந்தார் Vassy.

இந்நிலையில், பிரான்சிலுள்ள Lyon நகரத்தில் அமைந்துள்ள Emlyon Business School என்னும் கல்வி நிறுவனத்தின் தலைவரான இசபெல் (Isabelle Huault) என்பவரும், இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், கனடாவுடனான தூதரக உறவில் பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்காக, விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...