17 32
உலகம்செய்திகள்

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

Share

ஹமாஸின் பிடியிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய இஸ்ரேலிய பெண்கள்

ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் இன்றையதினம்(25.01.2025) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பணயக்கைதிகள், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இரண்டாவது சுற்றில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதற்கு பதிலாக இஸ்ரேல் 200 பலஸ்தீனியக் கைதிகளை விடுத்துள்ளது.

எனினும், அர்பெல் யூஹுட்(Arbel Yehud) எனப்படும் பணயக்கைதி விடுவிக்கப்படாததால், போர்நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த பெண் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, தனது காதலுடன் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரின் சகோதரர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் வாரம் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், பணயக்கைதிகளின் விடுதலையை உலகம் கொண்டாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலையான பணயக்கைதிகளின் பெற்றோரிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டு இஸ்ரேலுக்கு கொண்டு வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...