15 26
உலகம்செய்திகள்

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

Share

2,400 மைல்கள் தொலைவு.., உலகிலேயே மர்மங்கள் நிறைந்த தீவு எங்குள்ளது தெரியுமா?

பல மர்மமான நிகழ்வுகளுடன் கூடிய தீவு ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்து பல இடங்கள் உள்ளன. அந்தவகையில், தற்போது நாம் பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்ட தீவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் பார்க்க போகும் தீவு பௌவெட் தீவு (Bouvet Island) ஆகும். இந்த இடம் மக்களிடமிருந்து 2,400 மைல்கள் தொலைவில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடமாக அறியப்படுகிறது.

இந்த தீவானது தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில், தென்னாப்பிரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ளது. இது பனிக்கட்டி மற்றும் கடலால் சூழப்பட்டுள்ளது.

இந்த தீவானது பல மர்மங்களுடன் இணைந்துள்ளது. இந்த தீவில் 1964 -ம் ஆண்டில் மனிதர்கள் யாரும் இல்லாத ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த மர்மங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது.

இதையடுத்து 1979 -ம் ஆண்டில் அமெரிக்க செயற்கைக்கோள் Bouvet தீவு மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு அருகே ஒரு ஒளியைக் கண்டுபிடித்தது.

இந்த ஒளியானது தென்னாப்பிரிக்கா-இஸ்ரேலிய அணு ஆயுத சோதனையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை.

மேலும், இந்த தீவானது பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக விளங்குகிறது.

இங்கு, பெங்குவின், ஓர்காஸ் மற்றும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல, பனிப்பாறை பனி பெட்ரல் மற்றும் அண்டார்டிக் பிரியான் ஆகிய பறவைகளும் காணப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....