1 8
உலகம்செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடாத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் பலி

Share

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (3) காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடாத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், வான்வழி கண்காணிப்பு போன்ற பொதுமக்கள் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மத்திய காசாவின் ஒரு பகுதியை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அங்கிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இதேவேளை, பணய கைதிகள் மீட்பு, போரை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் (Hamas) அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

கட்டாரின் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...