2 26
உலகம்செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

Share

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

பிரேசிலிய(Brazil) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான விமானம், பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாஸியாவின் விமானம் என்றும்,அவர் தனது குடும்பத்தினருடன் சாவோ பாலோ மாநிலத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 61 வயதான தொழிலதிபர் அவரது மனைவி மூன்று மகள்மார் உட்பட்டவர்கள் பலியாகினர்.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...