13 23
உலகம்செய்திகள்

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

Share

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில், தாய்வானின் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருநாட்டின் தரப்பும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தாய்வானுக்கான பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அதன் தீவுக்கும் சுமார் 265 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தாய்வானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தை சீனா அதிகரித்துள்ளது, இதில் தீவுக்கு அருகிலுள்ள தினசரி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு இரண்டு சுற்று போர் பயிற்சிகளும் அடங்குகின்றன.

தாய்வானைச் சுற்றியுள்ள கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலும் மிகப்பெரிய கடற்படைப் படைகளை குவிப்பதாக சீனா அறிவித்திருந்தமையினால் தாய்வான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....