உலகம்செய்திகள்

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

13 23
Share

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில், தாய்வானின் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருநாட்டின் தரப்பும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தாய்வானுக்கான பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அதன் தீவுக்கும் சுமார் 265 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தாய்வானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தை சீனா அதிகரித்துள்ளது, இதில் தீவுக்கு அருகிலுள்ள தினசரி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு இரண்டு சுற்று போர் பயிற்சிகளும் அடங்குகின்றன.

தாய்வானைச் சுற்றியுள்ள கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலும் மிகப்பெரிய கடற்படைப் படைகளை குவிப்பதாக சீனா அறிவித்திருந்தமையினால் தாய்வான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...