13 23
உலகம்செய்திகள்

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

Share

தாய்வானுக்கு பைடன் வழங்கிய உறுதி

அமெரிக்கா (US), தாய்வானுக்கு (Taiwan) தனது 571 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவியை வழங்குவதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றில், தாய்வானின் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இருநாட்டின் தரப்பும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தாய்வானுக்கான பாதுகாப்பு உதவிக்கு ஒப்புதல் வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அதன் தீவுக்கும் சுமார் 265 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

தாய்வானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தை சீனா அதிகரித்துள்ளது, இதில் தீவுக்கு அருகிலுள்ள தினசரி இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டு இரண்டு சுற்று போர் பயிற்சிகளும் அடங்குகின்றன.

தாய்வானைச் சுற்றியுள்ள கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலும் மிகப்பெரிய கடற்படைப் படைகளை குவிப்பதாக சீனா அறிவித்திருந்தமையினால் தாய்வான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...