15 17
உலகம்செய்திகள்

ரஷ்யாவை திணற வைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு

Share

ரஷ்யாவை திணற வைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு

ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய உயர்மட்ட ஜெனரல் ஒருவர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டார்.

ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், அவரது உதவியாளருடன் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், SBU என்ற உக்ரேனிய புலனாய்வு அமைப்பு இருப்பதாகவும் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 54 வயதான கிரில்லோவ், ரஷ்யாவிற்குள் உக்ரைனால் படுகொலை செய்யப்பட்ட மிக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி என கூறப்படுகிறது.

இதேவேளை, அவரது கொலை, இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ரஷ்யாவை தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 87
செய்திகள்அரசியல்இலங்கை

மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கடி: சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில்...

Untitled 86
செய்திகள்இலங்கை

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் மாற்றம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...