7 42
உலகம்செய்திகள்

ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்

Share

ரஷ்யாவை எச்சரித்த பிரித்தானிய இராணுவம்

ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, போர் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

மேற்கத்தைய ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்தியிருந்தது.

அத்துடன், உக்ரைனுக்கு உதவ முன்வரும் மேற்கத்தைய நாடுகளையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே, புடினின் படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் அவர்களை தடுப்பதற்கு பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என ரொப் மகோவன் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...