14 16
உலகம்செய்திகள்

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

Share

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சியோல் எச்சரித்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வடகொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்த ஒருநாள் கழிந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர பபாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த நிலைமைக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உளவு அமைப்பின் கூற்றுப்படி, 1,500 வடகொரிய துருப்புக்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வந்துள்ளன மேலும் 10ஆயிரம் பேர் விரைவில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதன் மூலம், இந்தப்போரில், வடகொரியா, ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய செய்தியும் வெளியாகியுள்ளது.

மொஸ்கோவும், பியோங்யாங்கும் அண்மைய மாதங்களில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில், அவரை தமது நெருங்கிய தோழர் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைத்தமை பேசு பொருளாக மாறியிருந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...