14 16
உலகம்செய்திகள்

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

Share

உச்சக்கட்ட பதற்றத்தில் உக்ரைன்-ரஷ்ய போர்க்களம்: 10ஆயிரம் வட கொரிய துருப்புக்கள் தரையிறக்கம்

உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுடன் இணைந்து சண்டையிட வட கொரியா தமது படைகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சியோல் எச்சரித்துள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வடகொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்த ஒருநாள் கழிந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசர பபாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த நிலைமைக்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உளவு அமைப்பின் கூற்றுப்படி, 1,500 வடகொரிய துருப்புக்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு வந்துள்ளன மேலும் 10ஆயிரம் பேர் விரைவில் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் பொல்டாவா பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை ஒன்று மீட்கப்பட்டதன் மூலம், இந்தப்போரில், வடகொரியா, ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை வழங்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய செய்தியும் வெளியாகியுள்ளது.

மொஸ்கோவும், பியோங்யாங்கும் அண்மைய மாதங்களில் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிறந்தநாளில், அவரை தமது நெருங்கிய தோழர் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைத்தமை பேசு பொருளாக மாறியிருந்தது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...