உலகம்செய்திகள்

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

Share
8 27
Share

லெபனான் மற்றும் காசாவில் போர்நிறுத்தம்! சாத்தியக்கூறுகளை விளக்கும் பைடன்

லெபனானில் போர்நிறுத்தம் சாத்தியப்பட்டாலும் காசாவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது மிகவும் கடினம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது காசாவில் போர் நிறுத்தத்தை உருவாக்க வழிவகுக்கும் என அவர் கூறியிருந்தார்.

எனினும், சின்வாரின் மரணம் முடிவல்ல என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதன்மை இடத்தை வகித்த சின்வார், கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேலில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஆவார்.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ் அமைப்பினர், இது தம்மை மேலும் பலப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவாவிற்குள் இஸ்ரேல் ஊடுருவிய பின்னர், 42,500 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...