27 11
உலகம்செய்திகள்

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

Share

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

இந்திய ஆயுத நிறுவனங்களினால் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்குத் (Ukraine) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ரஷ்யா (Russia) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து (India) ஆயுதங்களை வாங்கிய கொள்வனவாளர்களே இந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியதால், ரஷ்யா கடுமையாக கோபம் அடைந்துள்ளது.

அத்தோடு குறித்த விடயத்திற்கு ரஷ்யா, இந்தியாவிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகள், வாங்கிய நாட்டுக்கே பயன்படுத்த அனுமதிக்கின்றன. இதனால், இந்த விவகாரம் குறித்த ரஷ்யாவின் அதிருப்தி பன்முறை வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அரசு இதற்கான அதிகாரபூர்வமான கருத்துகளை தெரிவிக்கவில்லை, ஆனால் அவற்றைப் பரிசீலிக்காமல் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், உக்ரைனுக்கு அனுப்பப்படும் குண்டுகள் பெரும்பாலும் இத்தாலிய நிறுவனங்களால் நிரப்பப்பட்டதாகவும், இந்தியா வழங்கிய ஆயுதங்கள் குறைவாகவே உள்ளன என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...