18 15
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கார்: சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் குடும்பத்தினர்

Share

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கார்: சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் குடும்பத்தினர்

அமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா என்ற தம்பதியினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பத்தின் போது, தமிழ் குடும்பம் பயணித்த காரில் இருந்தவர்கள் மற்றும் மற்றைய வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதே குடும்பத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் காரில் பயணிக்காத நிலையில் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.

இருப்பினும், சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அதிகாரிகளால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...