25 8
உலகம்செய்திகள்

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை : ஈரான் சாடல்

Share

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நடுநிலையாக இல்லை : ஈரான் சாடல்

காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா (USA) நடுநிலையாக செயல்படவில்லை என ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி (Minister Ali Bagheri Kani) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தோஹாவில் நடந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, காசாவில் நடைபெற்ற தாக்குதல்களையும், தெல் அவிவ் நகரில் ஆட்சி செய்கின்ற குற்றவாளிக் கும்பல் மற்றும் அவர்களின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவின் வஞ்சகம் மற்றும் பொய்மை தன்மையையும் தாம் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காசாவிலுள்ள சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு போர் ஆயுதங்களை வழங்குவதன் மூலம், இஸ்ரேலுக்கு (Israel) ஆதரவாக செயல்படுவதனால் அமெரிக்கா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக செயல்படவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் (Hamas) தனது உத்தியோகபூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க அரசு மற்றும் பிற மேற்குலக நாடுகளும் இணைந்து காசா இனப்படுகொலைக்கு தேவையான ஆதரவு மற்றும் நேரத்தை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது இவ்வாறிருக்க, காசா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் பிறகு, இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் நோக்கில், தனது வெளியுறவுத் துறை செயலாளரை இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...