16 14
உலகம்செய்திகள்

ஜப்பானில் இரத்து செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்கள்

Share

ஜப்பானில் இரத்து செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்கள்

ஜப்பானில் (Japan) மற்றொரு சூறாவளி அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 280 உள்நாட்டு விமானங்கள் இன்று (16) இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் 191 உள்நாட்டு மற்றும் 26 சர்வதேச சேவைகளை இரத்து செய்துள்ளது.

மேலும், ஜப்பானின் புல்லட் தொடருந்து சேவையின் முக்கிய பகுதிகளும் இன்று இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த சூறாவளி தொலைதூர பசுபிக் தீவான சிச்சிஜிமாவிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவின் கெமர் மொழியில் புளி என்று பொருள்படும் அம்பில் என்ற பெயர் கொண்ட இந்த சூறாவளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசுபிக் பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்குப் பகுதிகளில் கடுமையான காற்று, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என ஜப்பானின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...