2 19
உலகம்செய்திகள்

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

Share

நெதர்லாந்தில் வெற்றிடமாக மாறும் சிறைச்சாலைகள்

குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காரணமாக நெதர்லாந்தின் சிறைச்சாலைகள் வெற்றிடமாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் இவ்வாறான வித்தியாசமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

தற்போது, நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு 19 சிறைச்சாலைகள் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு பல சிறைச்சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டனையை விட மறுவாழ்வு அளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவது இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இந்த முயற்சியின் பலனாக அந்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

இதேவேளை, போதுமான கைதிகள் இல்லாமல் சிறை உட்கட்டமைப்பை பராமரிக்கும் செலவு உயர்ந்துள்ளதால் ஒரு புதிய சவாலுக்கு நெதர்லாந்து முகங்கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...