24 66a9c58aa9975
உலகம்

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

Share

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள் காரணமாக, திட்டமிட்டபடி நீச்சல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஓடும் Seine நதி நீரை கடந்த மாத இறுதியில் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் இரண்டுவகை கிருமிகள் நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.

ஆகவே, அந்த நதி நீரில் நீச்சல் போட்டிகள் நடத்துவது நீச்சல் வீரர் வீராங்கனைகளின் உடல் நலத்தை பாதிக்கலாம் என்ற கருத்து எழுந்தது.

அதைத் தொடர்ந்து, நதி நீர் சுத்தமாகத்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக பாரீஸ் மேயரான Anne Hidalgo Seine நதியில் நீந்தினார்.

ஆனால், நதி நீரின் தரம் தரம் திருப்திகரமாக இல்லாததால், இரண்டு முறை நீச்சல் பயிற்சிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒத்திவைத்தார்கள். மீண்டும் நதி நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.20 மணிக்கு கிடைத்த பரிசோதனை முடிவுகள், நீரின் தரம் நீச்சல் போட்டிகளை நடத்த தகுதியானதாக உள்ளதாக தெரிவித்துள்ளன.

ஒரு கட்டத்தில், நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் என மூன்று அம்சங்கள் கொண்ட ட்ரையத்லான் போட்டிகளை, நதி நீர் சுத்தம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, நீச்சலை விட்டு விட்டு, சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை மட்டுமே கொண்ட டூயத்லானாக ஆக்கிவிடலாமா என கூட போட்டி அமைப்பாளர்கள் யோசித்திருந்தார்கள்.

ஆனால், தற்போது நதி நீர் நீச்சல் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியுடையதாக இருப்பதாக ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவித்துள்ளதால், ட்ரையத்லான் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...

13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...