2 44 scaled
உலகம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் – பதிலடிக்கு தயாராகும் மத்திய கிழக்கு நாடு

Share

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் – பதிலடிக்கு தயாராகும் மத்திய கிழக்கு நாடு

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் ஹமாஸ் ஆகியன இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இஸ்மாயில் ஹனியே நேற்றைய தினம் ஈரானுக்கு பயணம் செய்துள்ளார்.

இதையடுத்து, குறித்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், டெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹமாஸ் தலைவரின் மெய்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு எதிராக ஹமாஸ் பதிலடி கொடுக்கும் என அந்த அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாசின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காணப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...

l91920251128120058
செய்திகள்உலகம்

இம்ரான் கான் வெளிநாடு செல்ல அரசு அழுத்தம்: பிடிஐ செனட் உறுப்பினர் குர்ராம் ஜீஷன் பரபரப்புத் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் (Adiala Jail) உயிரிழந்துவிட்டதாகச்...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

MediaFile 22
உலகம்செய்திகள்

ஹொங்கொங் உயரமான வீடமைப்பு வளாகத்தில் பயங்கர தீ: 13 பேர் பலி, 28 பேர் காயம்!

ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ...