உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share
wsaas scaled
Share

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பிரித்தானியாவின் புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கொன்சர்வேடிவ் (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல் திட்டத்தை கைவிடுவதே புதிய தொழிலாளர் அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருந்தது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் படி, புலம்பெயர்ந்தோர் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவர்.

போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க இந்த திட்டம் உதவும் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதில் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60இற்கும் மேற்பட்ட  இலங்கை தமிழர்களும் உள்ளடக்கப்படுவார்களா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...