wsaas scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பிரித்தானியாவின் புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கொன்சர்வேடிவ் (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல் திட்டத்தை கைவிடுவதே புதிய தொழிலாளர் அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருந்தது.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் படி, புலம்பெயர்ந்தோர் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவர்.

போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க இந்த திட்டம் உதவும் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதில் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60இற்கும் மேற்பட்ட  இலங்கை தமிழர்களும் உள்ளடக்கப்படுவார்களா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...