11 8
உலகம்செய்திகள்

ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல்

Share

ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது ஹூடைடாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அப்பகுதி தீ பற்றி எரிந்ததாகவும், வான்வழித் தாக்குதல்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் தொடர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் -காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளதோடு, கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சார்ஜென்ட் கைது! – முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் மைத்துனர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில், பெருமளவு கேரள கஞ்சாவுடன்...

25 68ff21948440b
செய்திகள்இலங்கை

‘எனக்குப் பாதாள உலகத்துடன் தொடர்பில்லை’: காவல்துறை மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை

தனக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியதற்கு...

25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

25 68ff12db23087
செய்திகள்இலங்கை

மதவாச்சியில் வெடிபொருள் மீட்பு: T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தீவிர விசாரணை

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 25, 2026) சட்டவிரோதமான...