tamilni 56 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் உணவு பணவீக்கம் அதிகரிப்பு: மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Share

கனடாவில் உணவு பணவீக்கம் அதிகரிப்பு: மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கனடாவில் (Canada) உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மளிகை பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரையில் உணவு பொருட்களின் விலைகள் 22.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, மக்களின் செலவுகளில் பிரதானமாக உணவுப் பொருள் விலை அதிகரிப்பு காணப்படுகின்றது.

இந்த நிலையில், மரக்கறி வகைகள், இறைச்சி, பழ வகைகள், மதுபானம் அல்லாத பானங்கள் என்பவற்றின் விலைகள் அதிகளவு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடு்த்து, உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவு குறைக்கப்படுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கனடாவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...