35
உலகம்செய்திகள்

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

Share

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இருக்கும் பணக்கார எம்.பி யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

கடந்த ஜூன் 9 -ம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.

நடந்த முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டனர்.

அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்று 99% பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடி ஆகும்.

அதில் முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடி ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...