24 66509b59cf608
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழினப் படுகொலையின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Share

தமிழினப் படுகொலையின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய (UK) தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும், பரந்த மனித உரிமை மீறல்களையும் நினைவுகூருகிறோம்.

இன்று, என் எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பி பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், மற்றும் அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட வலியுடன் தொடர்ந்து வாழ்பவர்கள் நோக்கியே உள்ளது.

இறுதி போரில் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதுடன், அட்டூழியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் இந்நாள் இருக்க வேண்டும்.

நம் நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளை நிதானித்து சிந்திக்கும்போது, ​​நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வை நோக்கி உழைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF)18 மே 2024 அன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதான எதிர் கட்சியாகிய தொழில் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரித்தானிய தமிழர் பேரவைக்கு இனவழிப்பு நினைவு தின செய்தி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...