24 664fde38a6af7
உலகம்செய்திகள்

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

Share

திருமண நாளில் ஒல்லியாக தோற்றமளிக்க டயட் செய்த இளம் பெண் மரணம்

ஒவ்வொரு இளம் பெண்ணும் தனது திருமண நாளில் அழகாக இருக்க விரும்புவார்கள். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடனேயே இளம்பெண்கள் Weight Loss Diet, அழகு சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடல் எடையை குறைக்க இளம் பெண்கள் எடுக்கும் உணவு மற்றும் சிகிச்சை சில நேரங்களில் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

இவ்வாறு, பிரேசிலில் உடல் எடையை குறைக்க முயன்ற மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரா பெர்னாண்டஸ் கோஸ்டா (Laura Fernández Costa) தனது திருமண நாளுக்கு முன்பு 8 கிலோ எடையை குறைக்க விரும்பினார்.

லாரா தனது உடல் எடையை விரைவில் குறைக்க உதவுவதற்காக அவரது வயிற்றில் ஒரு இரைப்பை பலூன் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறையில், உமிழ்நீர் நிரப்பப்பட்ட ஒரு சிலிகான் பை அடிவயிற்றில் செருகப்பட்டு வயிறு நிறைந்து இருக்கும் உணர்வை உருவாக்குகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

பொறியியலாளரான 31 வயதான லாரா, ஏப்ரல் 26-ஆம் திகதி கிளினிக்கில் இந்த அறுவை சிகிச்சை செய்தார்.

குடும்ப உறுப்பினர்களின் கூறியதன்படி, மறுநாள் அவள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். பின்னர் மே முதலாம் திகதி லாரா மற்றொரு கிளினிக்கிற்கு சென்றார். இங்குள்ள மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து பலூனை அகற்றினர்.

இருப்பினும், லாரா கடுமையான வலியால் அவதிப்பட்டு மே 6-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் ஒரு துளை இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

லாராவை திருமணம் செய்யவிருந்த மேத்யூஸ் டர்செட், ‘லாரா உண்மையில் அதிக எடையுடன் இருக்கவில்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தார் மற்றும் 70 கிலோ எடை மட்டுமே இருந்தார். எனினும், அவர் சிகிச்சை பெற்று வந்தார் என கூறினார்.

லாரா மற்றும் மேத்யூஸ் செப்டம்பர் 7-ஆம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...