24 664fb0cbe278c
உலகம்செய்திகள்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

Share

பொருளாதார நெருக்கடியை தீர்க்க திட்டம் வகுக்கும் பாகிஸ்தான்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான்(Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதோடு, அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் அதிக கடன்களை பெற்றுள்ளது.ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ‘பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்’ (PIA) நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனமான PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...