24 664f789a67d91
உலகம்செய்திகள்

உக்ரைன் இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை

Share

உக்ரைன்

இதைச் செய்தால், பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தப்படும்., ரஷ்யா எச்சரிக்கை

பிரித்தானிய ஆயுதங்களுடன் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், பிரித்தானிய இலக்குகளை குறிவைத்து தாக்கல் நடத்துவோம் என ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க லண்டன் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் (Maria Zakharova) கூறியுள்ளார்.

இதையடுத்து, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தினால், பிரித்தானிய இலக்குகள் மீது மாஸ்கோ பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்துள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில் “உக்ரைனின் எல்லை மற்றும் அதன் எல்லைகளுக்கு அப்பால்” பிரித்தானிய இலக்குகள் தாக்கப்படலாம் என்று ஜகரோவா செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஷ்யா ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் இதே எச்சரிக்கையை விடுத்திருந்த நிலையில், இப்போது மீண்டும் ஜகரோவா கூறியுள்ளார்.

ரஷ்யா இவ்வாறு சீற்றத்துடன் பதிலளித்தது மட்டுமல்லாமல், உக்ரைன் எல்லையில் அணுசக்தி ஏவுகணை பயிற்சிகளை இந்த மாதம் நடத்துவதற்கு அது ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...