24 664eeea7b337d
உலகம்செய்திகள்

பூமியையொத்த மற்றுமொரு கிரகம்: 1 வருடம் 17 மணிநேரம் மட்டுமே

Share

பூமியையொத்த மற்றுமொரு கிரகம்: 1 வருடம் 17 மணிநேரம் மட்டுமே

பூமியின் அளவோடு ஒத்து இருக்கும் அபூர்வமான கிரகத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ultra-cool நட்சத்திரத்தை சுற்றிவரும் exoplanet SPECULOOS-3 b என்கிற கிரகத்தை இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகமானது பூமியின் அளவிலேயே உள்ளதால் காஸ்மிக் அளவில் (cosmic scales) பூமி மற்றும் இந்த கிரகத்தின் அளவு நெருக்கமாக உள்ளது.

இந்த கிரகமானது நட்சத்திர சுற்றுப்புறத்தில் அதிக கிரகங்களை கண்டுபிடிப்பதற்கான வளர்ந்து வரும் திறனை எடுத்துக்காட்டுவதோடு பூமியிலிருந்து சற்று வேறுப்பட்டும் காணப்படுகின்றது.

பூமி தன்னையும் சூரியனையும் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள் ஆகும். ஆனால், SPECULOOS-3 b கிரகம் தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 17 மணி நேரம் மட்டுமே எடுக்கின்றது.

எனவே, SPECULOOS-3 b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 17 மணி நேரம் மட்டுமே ஆகும்.

மேலும், இந்த SPECULOOS-3 b கிரகமானது அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறப்படுவதோடு இதன் காரணமாக SPECULOOS-3 b அலை பூட்டப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

அதாவது, பகல்நேரம் என்று அழைக்கப்படும் கிரகத்தின் ஒரு பக்கம் தொடர்ந்து நட்சத்திரத்தை எதிர்கொள்வதால் நிரந்தரமாக பகல் வெளிச்சம் காணப்படுகிறது. இரவு பக்கமானது மூடப்பட்டிருக்கும்.

SPECULOOS (Search forhabitable Planets eclipsing ULtra-cOOl Stars) திட்டத்தால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதோடு ULtra-cOOl Stars -யை சுற்றி வாழக்கூடிய கிரகங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனை விட சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் பூமியின் அளவிலான கிரகங்களை கண்டறிவதை எளிதாக்குகிறது.

இந்த கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் உயிர்களை ஆதரிக்கும் திறனைப் புரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...