சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு : இஸ்ரேல் பிரதமர் அதிருப்தி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு குறித்து இஸ்ரேல் பிரதமர் கடும் கோபத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தீர்மானம் இஸ்ரேலின் ஜனநாயகத்திற்கு கடும் சவாலாக உள்ளதாகவும் இஸ்ரேலும் ஹமாஸும் சமமாக நடத்தப்படுவதே தனது கோபத்திற்கு காரணம் எனவும் இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேலால் சமமாக நடத்த முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.