images 6 1
உலகம்செய்திகள்

பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்

Share

பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம் (William, Prince of Wales), இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் அறுவ சிகிச்சை ஒன்றிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி கேட், பின்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்க, அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இளவரசி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது மாமனாரான மன்னர் சார்லசைப்போலவே, சிகிச்சையின் நடுவிலேயே பணிக்குத் திரும்ப அவரும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலிருந்து, விவசாயிகள், குறிப்பாக பண்ணை வைத்திருக்கும் இளம் விவசாயிகளின் மன நலம் தொடர்பிலான பணி ஒன்றிற்காக கேட் தனது கணவரான இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கேட்டின் உடல் நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...