உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் மரணம்!! அதிர்ச்சி வெளியிட்ட ரணில்

AP24140475273050 1716181102
Share

ஈரான் ஜனாதிபதியின் மரணம்!! அதிர்ச்சி வெளியிட்ட ரணில்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) திடீர் மரணம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட சிலர் பயணித்த உலங்குவானூர்தி திடீர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரைசியின் மரணம் குறித்து சர்வதேசம் அதிர்ச்சியையும், இரங்கல்களையும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரைசியின் திடீர் மரணம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,

“ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசியின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், உள்ளது ” என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...