24 663f9cac5c174
உலகம்செய்திகள்

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

Share

மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் கண்டுபிடிப்பு

மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால் மற்றும் கை வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 45 வயதுப் பெண்ணின் புறணிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஆரோக்கியமான திசுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளியில் உள்ள நரம்பியல் சுற்றுகள், இணைப்புகள், துணை செல்கள் மற்றும் இரத்த விநியோகத்தை வரைபடமாக்குவதற்கு ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் (Harvard researchers) கூகுளில் (Google) உள்ள இயந்திரக் கற்றல் நிபுணர்களுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மாதிரியின் 5,000 இற்கும் மேற்பட்ட துண்டுகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கி படங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனுடன் 57,000 தனிப்பட்ட செல்கள், 150 மீற்றர் நரம்பு இணைப்புகள் மற்றும் 23 சென்றிமீற்றர் இரத்த நாளங்கள் வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...