24 663a7eb33e1a4
உலகம்செய்திகள்

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்

Share

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ”குறித்த கோள்களில் ”Asteroid 2024 JF” என்ற கோளானது சிறியதாகவும் 26 அடி அளவை கொண்டுள்ளது.

இது மணிக்கு 42,081 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் இதன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 06 அன்று 21:58 UTC மணிக்கு(ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம்) நிகழும்.

இரண்டாவது பெரிய கோளாக 2024 HE2 பெயரிடப்பட்டுள்ளதுடன் இது 78 அடி உயரத்தில் சற்றுப் பெரிய சிறுகோளாக காணப்படுகிறது.

மணிக்கு 43,472 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுவதுடன் இது மே ஆறு அன்று 20:16 UTCக்கு கடந்து செல்லும்.

மேலும், பூமியில் இருந்து இதன் தூரம் 1.2 மில்லியன் கிலோமீட்டர் ஆகும் அத்தோடு மூன்றாவதாக ஆஸ்டிராய்டு 2024 HL2 என்ற கோள் பெயரிடப்பட்டுள்ளது.

84 அடி அளவு கொண்ட இந்த கோள் மணிக்கு 48,247 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுடன் பூமிக்கு மிக நெருக்கமான அணுகுமுறை மே 6 அன்று 08:12 UTCக்கு இருக்கும்.

இது பூமியில் இருந்து 2.9 மில்லியன் கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்வதுடன் இறுதியாக அஸ்டெராய்டு 2024 HM2 என்பது இறுதியாக வரும் சிறுகோள் ஆகும்.

171 அடி விட்டம் மற்றும் மணிக்கு 90,056 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குறித்த கோளானது மே ஆறு அன்று 14:49 UTC மணிக்கு 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அது கடந்து செல்லும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள்களின் அளவுகள் மற்றும் வேகம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும் அவற்றின் நெருங்கிய அணுகுமுறைகள் இன்னும் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ளன.

அவைகளில் ஒன்று 4,75,443 கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று சொல்லப்பட்டிருப்பதுடன் இது சந்திரனுக்கான தூரத்தை விட அதிகம் என நாசா எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...