24 6637f1dd4cb4a
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி

Share

ரஷ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ள ரஷ்யா, அவரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய உள்விவகார அமைச்சகத்தின் தரவுத்தளமே ஜெலன்ஸ்கியை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்படும் நிலையில் இருப்பவர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் பதிலளித்துள்ளது.

மேலும், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை நடைமுறையில் இருப்பதை அந்த நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

இது மட்டுமின்றி, உலகில் 123 நாடுகள் விளாடிமிர் புடினை(Vladimir Putin)கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அதிகாரம் கொண்டவை என்றும் உக்ரைன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா தற்போது பெரும் விரக்தியில் இருப்பதாலையே, இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதாகவும் உக்ரைன் விமர்சித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...

images 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு: அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

நாட்டில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்...