24 6627474c5c39e
உலகம்செய்திகள்

மிளகாய் பொடி தூவி மணப்பெண்ணை கடத்த முயன்ற பெற்றோர்.., எதற்காக செய்தார்கள்?

Share

மிளகாய் பொடி தூவி மணப்பெண்ணை கடத்த முயன்ற பெற்றோர்.., எதற்காக செய்தார்கள்?

மணமேடையில் இருந்து மணமகளை மிளகாய் பொடி தூவி குடும்பத்தினர் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருமணம் என்றாலே இரு வீட்டாருக்கும் பரபரப்பான நிலை தான் இருக்கும். திருமணத்திற்கு வருபவர்களை பார்த்துக் கொள்வதில் இருந்து திருமண ஏற்பாடுகள் வரை பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், ஆந்திராவில் பெற்றோரே மணப்பெண் மீது மிளகாய் பொடி தூவி கடத்த முயன்றுள்ளனர்.

இந்திய மாநிலமான ஆந்திரா, கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் சினேகா மற்றும் பட்டின வெங்கடானந்த். இவர்கள், இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்திருக்கின்றனர். அப்போது இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர், மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 21 -ம் திகதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகள் வீட்டாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது மணமகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வந்து கலந்து கொண்டனர். அங்கு, மேடையில் மணமகனுடன் இருந்த மணமகளை பார்த்த அவரது தாயும் சகோதரரும் சேர்ந்து இழுத்துச் சென்றனர்.

அதனை தடுத்த மணமகனின் வீட்டார் மீது மிளகாய் பொடியைத் தூவியிருக்கின்றனர். இதில், மணமகளை மணமகன் வீட்டார் சேர்ந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...