24 66173e08a5dd2
இலங்கைஉலகம்செய்திகள்

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Share

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகள் தொடர்பிலான வியன்ன பிரகடனம் பூரணமாக பின்பற்றப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே பிராந்திய வலயத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான், ரஸ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...