24 66173e08a5dd2
இலங்கைஉலகம்செய்திகள்

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Share

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகள் தொடர்பிலான வியன்ன பிரகடனம் பூரணமாக பின்பற்றப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே பிராந்திய வலயத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான், ரஸ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...