24 6611ac70585af
உலகம்செய்திகள்

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

Share

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க (America) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது மூன்று ரொக்கெட்டுகளை ஏவ உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மூன்று ரொக்கெட்டுகளும் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள அதன் (Wallops Flight Facility) வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியில் இருந்து ஏவப்படவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை இரவாக மாற்றுவதற்கு முன், இந்த மூன்று ரொக்கெட்டுகளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மாற்றம் அயனோஸ்பியரை (Ionosphere) எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய போதுமான தரவுகளை சேகரிப்பதே நாசாவின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளது.

மேலும் இந்த சூரிய கிரகணம்(solar eclipse)வானொலி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...