24 6611ac70585af
உலகம்செய்திகள்

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

Share

எதிர்வரும் சூரிய கிரகணத்தில் மூன்று ரொக்கெட்டுகளை அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்க (America) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது மூன்று ரொக்கெட்டுகளை ஏவ உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மூன்று ரொக்கெட்டுகளும் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள அதன் (Wallops Flight Facility) வாலோப்ஸ் விமான ஃபெசிலிட்டியில் இருந்து ஏவப்படவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை சந்திரனின் நிழல் பகலை இரவாக மாற்றுவதற்கு முன், இந்த மூன்று ரொக்கெட்டுகளை விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியில் ஏற்படும் திடீர் மாற்றம் அயனோஸ்பியரை (Ionosphere) எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய போதுமான தரவுகளை சேகரிப்பதே நாசாவின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளது.

மேலும் இந்த சூரிய கிரகணம்(solar eclipse)வானொலி மற்றும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...