24 660a6422c68a7
உலகம்செய்திகள்

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’ 

Share

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’

பிரான்சில் மாயமான குழந்தை ஒன்றின் உடல், 9 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச் சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனான்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று, மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் உயிரற்ற குழந்தை ஒன்றின் உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்த நிலையில், அது Emileஉடைய உடல் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’ கண்டுபிடிப்பு | Body Of Mysterious Child In France
Image: AFP via Getty Images

குழந்தை எப்படி இறந்தான் என்பது போன்ற விடயங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.

இதற்கிடையில், Le Vernet கிராமத்தை, சபிக்கப்பட்ட கிராமம் அல்லது கடவுளின் கோபத்துக்கு ஆளான கிராமம் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே, அதிர்ச்சியளிக்கும் பல உயிரிழப்புகள் அங்கு நடந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், 2015ஆம் ஆண்டு, ஏர்பஸ் விமானம் ஒன்றின் விமானியான Andres Lubitz என்பவர், வேண்டுமென்றே, விமானத்தைக் கொண்டு அந்த பகுதியிலுள்ள மலையில் மோதியதைச் சொல்லலாம் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

அந்த விமானம் மலையில் மோதி நொறுங்கியதில், 150 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...