24 660696ae71952
உலகம்செய்திகள்

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

Share

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் வரலாற்றை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரருக்கு நிர்வாகம் அளித்த பரிசானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகன்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ஓட்டங்களை குவித்து வெற்றிப் பெற்றது.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களில் தோல்வி அடைந்தார்.

கடைசி வரை களத்தில் நின்ற கிளாசன் ருத்ர தாண்டவம் ஆடினார். 34 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்கள் குவித்து, IPL தொடரின் வரலாற்றை முறியடித்தார்கள்.

அதாவது அதிகப்படியான புள்ளிகளை பெற்றுள்ளார்கள்.

அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களுக்கு பரிசு வழங்கியுள்ளது.

அந்தவகையில் ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கு அணிவிக்கப்பட்ட இந்த தங்க சங்கிலியின் பெறுமதி இந்திய மதிப்பில் 80 இலட்சம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...