24 6604fef0e5cdf
உலகம்செய்திகள்

ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

Share

ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் ஏற்றப்பட்டிருந்த கொலம்பிய வேகப் படகு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளமையானது இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகத்தை தடுத்துள்ளது.

குறித்த வேகப் படகை கொலம்பியாவின் இராணுவக் கப்பல்களும் விமானங்களும் துரத்திச் சென்று, கொலம்பியாவிற்கு அப்பால் கரீபியன் கடலில் வைத்து பிடித்துள்ளன.

இதன்போது, குறித்த படகில் இருந்து 113 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொலம்பிய கடற்படை வெளியிட்டுள்ள வான்வழி காணொளியில், சந்தேகத்திற்கிடமான படகின் பணியாளர்கள் தப்பிக்க முயல்வது மற்றும் பொதிகளை தண்ணீரில் வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், பல மைல்கள் துரத்தலுக்குப் பிறகு, படகு இடைமறிக்கப்பட்டுள்ளதோடு வேகப் படகில் இருந்த கொலம்பியாவை சேர்ந்த மூவரும் ஹோண்டுரான் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...