24 6602980bf229e 1
உலகம்செய்திகள்

ஒன்றுடன் ஒன்று மோதிய 40 வாகனங்கள்: ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்கள்

Share

ஒன்றுடன் ஒன்று மோதிய 40 வாகனங்கள்: ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்கள்

நேற்று முன்தினம் ஜேர்மனியில் நிகழ்ந்த தொடர் விபத்துக்களில் இரண்டு பேர் பலியானார்கள், 31 பேர் காயமடைந்துள்ளார்கள்.

நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணியளவில், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் Nuremberg நோக்கிச் செல்லும் A3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துக்களில் 40 வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கனமழை காரணமாக ஒரு இடத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட, பின்னால் வந்த கார்கள் அந்த இடத்தில் குவிய, கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது.

இரண்டாவது விபத்தில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

மூன்றாவது விபத்து 30 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது, அந்த விபத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது, பின்னால் வேகமாக வந்த கார்கள் மோதியுள்ளன.

ஆக மொத்தத்தில் 40 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி நிற்க, நெடுஞ்சாலையே மூடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களின்போது, இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள், 31 பேர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பொலிசார் இந்த விபத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...