tamilnaadi 151 scaled
உலகம்செய்திகள்

பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு

Share

பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு

புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில்,

இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் ,தமது குடும்பத்தினர் நம்பமுடியாத, கடினமான இரண்டு மாதங்களை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனையின் போதே தமக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மன்னர் சார்லஸ், தனது மருமகளின் துணிச்சலைக் கண்டு மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் தமது செய்தி பதிவு ஒன்றில், கேட் “மிகப்பெரிய துணிச்சலை” காட்டியுள்ளார் மற்றும் “முழு நாட்டின் அன்பையும் ஆதரவையும்” பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...