tamilnaadi 152 scaled
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

Share

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

பங்களாதேஷில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த 100ற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த பயணிகள் தொடர்ப்பில் தகவலிருந்த இந்தோனேசிய பாதுகாப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் தகவலறிந்த இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...