tamilnaadi 152 scaled
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

Share

இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு

பங்களாதேஷில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த 100ற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த பயணிகள் தொடர்ப்பில் தகவலிருந்த இந்தோனேசிய பாதுகாப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பங்களாதேஷில் இருந்து ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் தகவலறிந்த இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....