tamilni 290 scaled
உலகம்செய்திகள்

இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

Share

இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இலங்கையை போன்ற நிலைக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருக்கும் இம்ரான் கான் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்.

அப்போது அவர் 2024 பொதுத்தேர்தலை மீண்டும் சாடினார். உரிமை ஆணையைத் திருடுவதன் மூலம் நாட்டின் நம்பிக்கைகள் சிதைந்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் இலங்கை போன்ற நிலைமை ஏற்படும் என்று கூறினார்.

தனது கணிப்புகள் அனைத்தும் உண்மையாகிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் இறுதிக் கட்டக் கடனை பெறப்போகிறது மற்றும் பணவீக்கத்தை புதிய அலைக்குப் பிறகு நாடு வீதிக்கு செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று கூறிய இம்ரான் கான், பாதுகாப்பு அச்சுறுத்தல், தேர்தல் பொய்யானது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதுடன் மோசடிக்கு எதிராக அமைதியான போராட்டங்களை தங்கள் கட்சி தொடரும் என்றும் இம்ரான் கான் கூறினார்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...