tamilni 183 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

Share

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடூனாவில், ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 பள்ளி குழந்தைகளில் குறைந்தது 28 பேர் தப்பி ஓடி விட்டதாக அந்த மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கடூனா மாநிலத்தின் Kuriga நகரில் நடந்த தாக்குதலில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் குழந்தைகள் இலக்கு வைக்கப்பட்டது.

கடத்தப்பட்ட குழந்தைகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை, 300 க்கு நெருக்கமான எண்ணிக்கையைக் குறிக்கும் அறிக்கைகள் உள்ளன.

இந்த சம்பவத்தின் போது சில குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தப்பியோடினர். அதில் தற்போது குறைந்தது 28 குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த 28 குழந்தைகள் தப்பி ஓடியது, கடத்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்புவதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

நைஜீரியாவின் கடூனா மாநில கவர்னர் உபா சானி, கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டுவதற்காக அதிகாரிகள் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேலைகளுக்கு நைஜீரிய ராணுவம் தலைமை தாங்கி வருகிறது.

நைஜீரியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...