4 2 scaled
உலகம்செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

Share

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வரும் தம்பதி சீனிவாச கிருஷ்ணகுமார் – சைனஜா. இவர்களது மகள் வைஷ்ணவி (20), மகன் ஸ்ரீராம் (14).

8ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீராம், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் கேமில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சைனஜா அவரை கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவும் சிறுவன் கேம் விளையாடியுள்ளார்.

மீண்டும் சைனஜா மகனை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் காரணமாக மன விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...