tamilni 611 scaled
உலகம்செய்திகள்

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

Share

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வெகு விமர்சையாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஆசியாவின் பெரும் கோடீஷ்வரர் வீட்டு திருமண கொண்டாட்டம் என்பதால், ஒவ்வொரு நாளும் இது குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் மூன்று நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை ஆனந்த் மற்றும் ராதிகா நடத்த உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பிரபலங்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

இந்த கொண்டாட்டங்களின் போது விருந்தினர்களுக்கு ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மெனு (special menu) தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 2,500 உணவுகளை தயாரிக்க 21 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

விருந்தினர்களுக்கு இந்திய உணவு வகைகள் மற்றும் ஜப்பானிய, மெக்சிகன், தாய் மற்றும் பார்சி பாரம்பரிய உணவுகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

காலை உணவாக 75 வகை உணவுகளும், மதிய உணவாக 225 உணவுகளும், இரவு உணவிற்கு 275 வகைகளும் வழங்கப்படும்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, விருந்தினர்கள் விரும்பும் 85 உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...