tamilni 611 scaled
உலகம்செய்திகள்

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

Share

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வெகு விமர்சையாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஆசியாவின் பெரும் கோடீஷ்வரர் வீட்டு திருமண கொண்டாட்டம் என்பதால், ஒவ்வொரு நாளும் இது குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் மூன்று நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை ஆனந்த் மற்றும் ராதிகா நடத்த உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பிரபலங்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

இந்த கொண்டாட்டங்களின் போது விருந்தினர்களுக்கு ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மெனு (special menu) தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 2,500 உணவுகளை தயாரிக்க 21 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

விருந்தினர்களுக்கு இந்திய உணவு வகைகள் மற்றும் ஜப்பானிய, மெக்சிகன், தாய் மற்றும் பார்சி பாரம்பரிய உணவுகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

காலை உணவாக 75 வகை உணவுகளும், மதிய உணவாக 225 உணவுகளும், இரவு உணவிற்கு 275 வகைகளும் வழங்கப்படும்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, விருந்தினர்கள் விரும்பும் 85 உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...